ஒரு கலைமகளின் - யோகஸ்ரீ... ஏணிப்படிகள்!
தேடும் முகில்திரண்டு தீண்டும் நிலாகண்டு
ஆடும் கடல்நாணம் அள்ளிஆகா யம்கிள்ளி
சூடும் ஒளிதென்றல் தூயதமிழ் தேன்இசை
பாடுப் பொருள் பரவசமாய் பார்மயங்க
ஈடுயார்? யோகசிறீ யே!
எழில்...? தேன் இசையில் பசையாகிய
யோகசிறீ...
இளைய ராசாவின் இசையோ?
இசைக்கும் தேனீக்கள்...மொழியோ?
மொழியில் 'சொல்'ஆடும் தமிழோ?
தமிழில் தள்ளாடும் மதுவோ?
மதுவைச் சுரந்தாடும் மலரோ?
மலரில் இதழாடும் கலையோ?
கலையைக் கவர்தாடும் முகிலோ?
முகிலைக் கண்டாடும் மயிலோ?
மயிலை நனைத்தாடும் மழையோ?
மழையில் மகிழ்ந்தாடும் வயலோ?
வயலில் வந்தாடும் மீனோ?
மீனைப் போலாடும் விழியோ?
விழியில் விழித்தாடும் கனவோ?
கனவில் நின்றாடும் நினைவோ?
நினைவில் நெளிந்தாடும்...இரவோ?
இரவில் எழுந்தாடும் ஒளியோ?
ஒளியில் அசைந்தாடும்...கொடியோ?
கொடியில் உருண்டாடும் பனியோ?
பனியில் குளிர்ந்தாடும் கனியோ?
கனியில் குழையாத சுளையோ?
சுளையைச் சுவைத்தாடும்...கிளியோ?
கிளிகள் அமர்ந்தாடும் கீற்றோ?
கீற்றைக் கிழித்தாடும் காற்றோ?
காற்றும் காணாத நிலவோ?
நிலவைப் பார்த்தாடும் வனமோ?
வனத்தில் வண்டாடும் ஒலியோ?
ஒலியில் சுவாசிக்கும் இசையோ? எழில்...தேன் இசையில் பசையாகிய யோகசிறீ தமிழே!
பார்வையிடு: மகிழும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!:
வானுள் நிலாஒளிர்வாய் 'ZEE தமிழ்'அரங்குள் யோகசிறீ ... https://wiiisindias.blogspot.com/2025/01/lydian-surprises-with-epic-drum-solo.html?spref=tw
பி சுசீலா பாட்டுக்கு பேச்சு மூச்(சு) இல்லையோ?
பாட...யோக ஸ்ரீகுரல் பட்டதால் தீட்டுற்றதோ?
வானவில் வளைந்து வணங்கும் தமிழ்நிலா...
ஒளிநெளிவோ டுமுகில்தேன் உலாவபூ(மி) இதழ்தொட்டு,
தென்றல் தேடி சிலிர்த்திட்ட யோகஸ்ரீ...
இசைவிண்ணுக்கு முதல்பரிசு இல்லையேஏன்?வான்தமிழே!
Continue reading:வானுள் நிலாஒளிர்வாய் 'ZEE தமிழ்'அரங்குள் யோகசிறீ தாரகை...
Jai Kumar Pn என்பவரது பதிவு
யோக ஸ்ரீ க்கு முதல் பரிசு கொடுத்திருக்க வேண்டும் . ஒரு சிறு வயது கதாநாயகிக்கு பின்னணி குரல் கொடுக்கும் அளவிற்கு மேற்சுட் voice. இருக்கு , தீவினேஷ் சிறுவன். அவனுக்கு கதா நாயகனுக்கு பின்னணி பாடல் பாட முடியாது. இந்த முடிவு .பக்கா ஞான சூன்யம் கொண்டவர்கள் கொடுத்து இருக்கிறார்கள். சோக மான பாடல்களை பாடி பரிதாபத்தை தான் தேடிகொண்டான் . அவனுக்கு யாரும் எதிரி
அல்ல. ஆனால் நியாய மாக ஜட்ஜ் பண்ண தெரியாத முட்டாள் கள்.
யோக ஸ்ரீ க்கு முதல் பரிசு கொடுத்திருக்க வேண்டும் . ஒரு சிறு வயது கதாநாயகிக்கு பின்னணி குரல் கொடுக்கும் அளவிற்கு மேற்சுட் voice. இருக்கு , தீவினேஷ் சிறுவன். அவனுக்கு கதா நாயகனுக்கு பின்னணி பாடல் பாட முடியாது. இந்த முடிவு .பக்கா ஞான சூன்யம் கொண்டவர்கள் கொடுத்து இருக்கிறார்கள். சோக மான பாடல்களை பாடி பரிதாபத்தை தான் தேடிகொண்டான் . அவனுக்கு யாரும் எதிரி
அல்ல. ஆனால் நியாய மாக ஜட்ஜ் பண்ண தெரியாத முட்டாள் கள்.
Click & view:https://www.facebook.com/100021965831377/posts/1919214232154086/?mibextid=oUAKdULthQSeje3Y


Comments
Post a Comment