Zee tamil யோகஸ்ரீ பாடிய பாடல்கள் full Song|👌 #yogashree_full_songs_coll...
ஆச்சரிய மலையாள தமிழே! அறிவியல்பண் வேடன் இசையே!
பாச்சொரிய தாய்மொழியில் பாடஉன் பாசம்சுழல மக்கள் திரள
தீச்சட்டி மூளையன்உன் திறமை தகுதி அறிவிலும் உயர்வு
கூச்சம்இன்றி வீசுகிறான் சாணம் வேதமாம் வெற்றி பறைஅடி
பிறப்புவழி மூளை இலாஅய்யன் பிரசவத்தி லும்பேதம்
கருஅணு மரபுள்ளும் கறிசாதி சிறுக்குறு சதைகூறென
வேதா! முன்னோர் பாடறிந்தாய் ஓதுவோன்பூ நூல்கழற்ற
பாடு தெய்வம் விதியாவும் ஊழலே எனஓங்கி பறைஅடி
அன்னாள் புத்தன் அறிவுச்சிற்பி இந்நாள் ஞானவேடன் கேள்வி
விந்தொட்டு உதிர்க்கும் விடைகளில் உருளும் மெய்போற்றி
சனாதன ஆன்மீக கடவுள் வாழ்த்துரை தருவானா ? - அறிவியல்
வினாவும் வெளிபடும் பதிலும் வேடனேஎன நிமிரஎன் வாழ்த்து
தாயின்தொப் புல்வழி மலையாளம் தமிழ்பருகி வளர்ந்தாய்!
காயம்புகழ் அன்னை மொழி கவிதைஆக்கி உயர்ந்தாய்
தொற்றுமதம் தூறு வெறுத்தாய் துன்புறுத்தும் சாதி அறுத்தாய்
வெற்றி சிகரம்நீ அடைய வேற்றுமையை பிய்த்தாய் - தேச
பற்றற்றோன் பகையுற்றான் காரணம் பாடுப் பாதக மதமே!
தோழ்வி துவம்சம் ஆக துவளும் தயக்கம் வென்றாய்
வாழ்வு என்ன வாழ்வு என்று மயக்கம் துவள நின்றாய்
வாடும் முதுகுகள் எல்லாம் நிமிர ; வானமே என்று உன்னை
தேடும் முன்னேற்ற வேதா ! தீண்டா வெறிநோய் ஓடும்நீ
பாடும் சமநீதி பலம்கொண்டு ஆளுமை கைபற்ற வேண்டும்.
வேற்று மையுள் ஒற்று மை சரியோ ? வேறுபாடுதேவையோ ?
வேற்று மையுள் ஒற்று மை ! உன்விளக்கெண்ணை ஆனால் !
சாற்றிடு திருந்தி சாதிக்குள் திருமணம் தவறென்று !
போற்றும் பழய பேதகால புத்தகத்தின் புதிய அத்யாயமே !
வேற்று மை ஓதல் விலகி ... ஒற்று மை மாசுவிலகி
காட்டுஉன் நாட்டுள் ; கனியும் சமத்துவம் !
தீட்டு சாதிகளே ! திக்கெட்டும் பாட்டுப்பாடு !
ஒற்றுமைக்கு எதிரிகள் வேண்டும் ! பேதங்கள்
முற்றவேண்டாம் சாதிக்குள் திருமணம் தவிர் !
கற்ற சாதிபாகு பாட்டை வேட பாடு
கருக்கு
ஆதாம் ஏவாள் கால மானுடம் இடையே
பேதங்கள்இல்லை !
மனிதர்கள் மட்டுமே ;
சாதிகள் இல்லை !
லெமூரியா ஆழிப் பேரலை சீற்றங்கள்
குதறிட கண்டங்கள் ஆறுஎன்று ஆகின !
அன்று மானுடம்'என்பது'இரண்டுஆயிற்று
இரண்டு சாதிகள் எனும்படி பிளவுற்றது
ஒன்று நகர் மறொன்று
போகர் ! - நாகர்
இந்திய மண்ணின் , புதல்வர் புதல்வியர் !
போகர் இட்லர்கால அடிமை ஆரியர்கள் - இந்தியாவில்
போகர் நுழைந்துற நாடு மூன்று ஆகிற்று !
நகர் ஒற்று மை விலகிட சூத்திரன் பஞ்சமன்பேத
ஆரவாரங்களில் பலநூறு சாதிகளாக ; ஆரியன்
சோரம் போகாது நாடு ஆள நகர் அடி மை ஆகினர்
ஆக்கம் எதுவும் இல்லை !
ஊக்கம் உணரவில்லை ! பசி ...
தூக்கம் விலகியது ! மைதி ....
ஏக்கம் இறுகித்தது !
பாக்கு
வெற்றிலை மாற்ற - சாதி
சீக்கு தொட்டி லை ஆட்டிடுது - கோடம்
பாக்கம் பக்தி ... ஆகிட்டது ! - புவி
காக்கதெய்வமும் இல்லை ! சாதிஒழிப்பில்
நாட்டம் அரசி ( யலி ) இல் இல்லை - அன்பு
தாக்கம் உணர்வில் இல்லை ! இரக்க -
தேக்கம் நாட்டில் இல்லை ! ஒற்றுமை
பூக்கும் ? நம்பிக்கை இல்லை ! சுயநல -
மூர்க்கம் மதமேநாட ... ஆரியன் நோக்கம் -
சாய்க்க - இதோ வேதனை கண்டேன்
எவரும்தம் உழைப்பில் உண்ணவேண்டும் அல்லாமல் ;
குவலயத்துள் ஏழைகளை கடவுள் அளித்தது என்று ,
அவரதுஉழைப்பை திருடுவது ஊழல் ! கடவுள்தான் யாவும்
எவருக்கும் தந்திட்டதுபோல் பொய்பறைவதும் ஊழல் !
இல்லை எனும்படி நிரூபனம் இல்ல இறைவனை
இருந்திடுவதாய் இயம்பல் ஊழல் ! - வெறும்
சொல்லாலே இறைவன் உண்டென்றும் நம்மைப்
படைத்ததாக சாதிப்போற்றிப் பிழைப்பதும் ஊழல் !
காட்டிடு தெய்வத்தை என்று அறிஞன் வேடன் கேட்டிட
காட்டிடாது கல்லை இறைவன் என்று பறைவது ஊழல் !
காட்டெனக் கேட்டிடும் கடமைவேடனை மானுடத்துள் ...
போட்டியிடும் போகர் கல்பதர்போல் மாறிச்சபிப்பது ஊழல் !
மகிழும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!: ஆச்சரிய தமிழ்மின்னலே! அறிவியல் வேடன் இசையே! wiiisindias.blogspot.com/2025/06/
Comments
Post a Comment